Showing posts with label Irumbilae orr irudhayam. Show all posts
Showing posts with label Irumbilae orr irudhayam. Show all posts
இரும்பிலே ஓர் இருதயம் முளைக்குதோ

முதல்முறை காதல் அழைக்குதோ


பூஜ்ஜியம் ஒன்றோடு

பூவாசம் இன்றோடு

மின்மீன்கள் விண்னோடு

மின்னல்கள் கண்னோடு


கூகுல்கள் காணாத

தேடல்கள் என்னோடு

காலங்கள் காணா காதல்

பெண் பூவே உன்னோடு


iRobo உன் காதில்

ஐ லவ் யூ சொல்லட்டா?


I am a super girl

உன் காதல் rapper girl


என்னுள்ளே எண்ணெல்லாம்

நீதானே நீதானே


உன் நீலக் கண்ணோரம்

மின்சாரம் பறிப்பேன்

என் நீலப் பல்லாலே

உன்னோடு சிரிப்பேன்


என் engine நெஞ்சோடு

உன் நெஞ்சை அணைப்பேன்

நீ தூங்கும் நேரத்தில்

நான் என்னை அணைப்பேன்


என்னாளும் எப்போதும்

உன் கையில் பொம்மையாவேன்


---


ெமரியில் குமரியை

தனிச் சிறை பிடித்தேன்

shutdown-ஏ செய்யாமல்

இரவினில் துடித்தேன்


sensor எல்லாம் தேயத்தேய

நாளும் உன்னை படித்தேன்

உன்னாலே தானே என் விதிகளை மறந்தேன்


எச்சில் இல்லா எந்தன் முத்தம்

சர்ச்சை இன்றிக் கொள்வாயா?

ரத்தம் இல்லாக் காதல் என்று

ஒத்திப் போகச் சொல்வாயா?


உயிரியல் மொழிகளில்

எந்திரன் தானடி

உளவியல் மொழிகளில்

இந்திரன் நானடி


சாதல் இல்லா சாபம் வாங்கி

மண்மேலே வந்தேனே

தேய்மானமே இல்லா

காதல் கொண்டு வந்தேனே

-----